'திருமங்கலம்': டிஐஜி-எஸ்பிக்கு மீண்டும் அதே இடம்
சென்னை: திருமங்கலம் இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆணைய உத்தரவால் இடமாற்றம் செய்யப்பட்ட 6 போலீஸ் உயர் அதிகாரிகள் மீண்டும் அதே இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள உத்தரவு:
திண்டுக்கல் சரக டிஐஜியாக இருந்து வரும் ஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை டிஐஜியாக பணிபுரிந்து வரும் அம்ரேஷ் புஜாரி திண்டுக்கல் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை பூக்கடை துணை ஆணையர் எம்.மனோகர், மதுரை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை எஸ்பியாக இருந்துவரும் பிரேம் ஆனந்த சின்ஹா, சென்னை பூக்கடை துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை டிஎஸ்பியாக பணிபுரிந்து வரும் எம்.சுந்தரேசன் திருப்பரங்குன்றம் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, திருப்பரங்குன்றம் உதவி எஸ்பி இருந்து வரும் பிரவீன் குமார் அபினாபு, முத்துப்பேட்டை உதவி எஸ்பி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications