சத்யம் மோசடி: பிரைஸ் வாட்டர்ஹவுஸ் அதிகாரிகள் கைது!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்த பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தின் இரு உயர் அதிகாரிகளை ஆந்திர மாநில சிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் சீப் ரிலேஷன்ஷிப் பார்ட்னர் எஸ்.கோபாலகிருஷ்ணன், எங்கேஜ்மெண்ட் லீடர் சீனிவாஸ் தலூரி ஆகியோரை இன்று சிஐடி போலீஸார் கைது செய்தனர்.

சத்யம் கணக்குகளில் தான் செய்த முறைகேடுகளுக்கு இந்த தணிக்கை நிறுவனம் எப்படியெல்லாம் உடந்தையாக இருந்தது என ராமலிங்க ராஜூ கூறிய தகவல்களின் அடிப்படையில் இந்த இருவரையும் கைது செய்திருப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

ராஜு அளித்த தகவல்களைக் கொண்டே தாங்கள் தணிக்கை அறிக்கை கொடுத்ததாகவும், இந்த முறைகேடுகளில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்றும் முதலில் பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூறியிருந்தது.

ஆனால் இப்போது, ராஜுவின் மோசடி கணக்குகளை தெரிந்தே தணிக்கை செய்துள்ளது பிரைஸ்வாட்டர் ஹவுஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டுளளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+