பெங்களூர்: தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூர் இந்திரா நகரில் இன்று காலை ஹோன்டா அக்கார்ட் கார் மோதி நான்கு பேர் பலியானார்கள்.
இன்று காலை 6 மணியளவில் இந்திரா நகர் மார்க்கெட் பகுதியில், ஹோன்டா அக்கார்ட் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
திடீரென அந்தக் கார் தாறுமாறாக ஓடியது. அதில் முதலில் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதி சாய்த்து விட்டு, வாக்கிங் போய்க் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது.
இந்த கோர சம்பவத்தில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
காரை ஓட்டி வந்த நபர் தப்பி ஓடி விட்டார். காலையில் நடந்த இந்த மோசமான விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டிய நபரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications