22 தமிழக மீனவர்களைப் பிடித்தது இலங்கை கடற்படை
கொழும்பு: நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்துப் பிடித்துச் சென்றுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இலங்கையின் வடக்குப்பகுதியில், தமிழகத்தை சேர்ந்த 6 படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், படகுகளை சுற்றி வளைத்தனர். படகுகளில் இருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.
அவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 22 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பிடிபட்ட மீனவர்கள் 22 பேரும், தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மல்லிப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் மீனவர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications