பிரபாகரன் தப்பி ஓடவில்லை - வன்னியில்தான் இருக்கிறார்: கருணா
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தப்பி ஓடவில்லை. அவர் தப்பி ஓடவும் மாட்டார். வன்னி காட்டுக்குள்தான் அவர் இருப்பார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், அரசு ஆதரவில் எம்.பியானவருமான கருணா கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று கொழும்பில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த நெருக்கடியான நேரத்தில் பிரபாகரன் இலங்கையை விட்டு தப்பி ஓட முடியாது. அவர் தப்பவும் மாட்டார்.
மலேசியாவுக்கு அவர் தப்பியிருக்கலாம் என்று கூறுவதை நான் நம்பவில்லை. அவர் இந்தியாவுக்கும் தப்பிப் போக முடியாது. அவர் தப்பி வந்தால் உடனடியாக இந்திய அரசு அவரைக் கைது செய்து விடும்.
இலங்கைப் படைகளும் பிரபாகரன் தப்பி ஓடி விட முடியாதபடி தீவிர கண்காணிப்பில் உள்ளன. எனவே அவர் தப்பி ஓட மாட்டார். வன்னி காட்டுக்குள்தான் அவர் பதுங்கியிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.
முன்பும் கூட இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்பட்டபோது அவர் காட்டுக்குள் சென்று பதுங்கியுள்ளார். பின்னர் கொரில்லா தாக்குதல்களின் மூலம் அனைத்துப் போராளிகளையும் ஒருங்கிணைத்தார்.
ஆனால் தற்போது அவ்வாறு செய்ய முடியாத நிலையில் புலிகள் உள்ளனர். அவர்களிடம் முன்பிருந்த வீரமிக்க வீரர்கள் இப்போது உயிருடன் இல்லை அல்லது படையினரிடம் பிடிபட்டு விட்டனர்.
பிரபாகரனை ஒடுக்கினால்தான் தமிழர்களின் உரிமைகளைக் காக்க முடியும். தற்போது 90 சதவீத தமிழரர்கள் பிரபாகரன் பிடிபட வேண்டும் என்ற கருத்தில் உள்ளனர்.
கிழக்கில் உள்ள அனைத்து சிறார் போராளிகளும் இன்னும் 3 மாதங்களில் மறுவாழ்வு பெறுவார்கள். இவர்களில் எங்களது அமைப்பைச் சேர்ந்த சிறார்களும் உள்ளனர். இதுதொடர்பாக எனது கட்சி, இலங்கை அரசு மற்றும் யுனிசெப் அமைப்புக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி 3 மாதங்களுக்குள் அனைத்து சிறார் போராளிகளும் மறுவாழ்வுக்கு உட்படுத்தப்படுவர். அவர்களுக்கான நலத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் உள்ள சிறார் நல அலுவலகத்தில் எங்களது அமைப்பைச் சேர்ந்த 14 சிறார் போராளிகளை ஒப்படைத்துள்ளோம். இன்னும் 2 வாரங்களில் மேலும் 20 சிறார்களை ஒப்படைக்கவுள்ளோம்.
தற்போது எங்களது பிரதிநிதிகளுக்கு அரசே போதிய பாதுகாப்பு அளிக்கிறது. எனவே எங்களது பாதுகாப்புப் படையை நாங்கள் கலைத்து விட்டோம். முன்பு எங்களது பாதுகாப்புக்காக சிறிய படையை வைத்திருந்தோம். தற்போது அதுவும் இல்லை என்றார் கருணா.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications