முல்லைத்தீவு நகருக்குள் நுழைந்தது ராணுவம்: இலங்கை
Subscribe to Oneindia Tamil

விடுதலைப் புலிகள் வசம் உள்ள ஒரே கடைசிப் பகுதி முல்லைத்தீவு மாவட்டம்தான். அதைப் பிடிக்க கடும் சண்டை நடந்து வருகிறது.
நேற்று கல்மடுக்குளம் அணைக்கட்டை விடுதலைப் புலிகள் குண்டுவைத்துத் தகர்த்து, ராணுவத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை ராணுவம், முல்லைத்தீவு நகருக்குள் நுழைந்துள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ரம்புகவெல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முல்லைத்தீவைப் பிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக முல்லைத்தீவு நகருக்குள் இனறு ராணுவத்தின் 59வது பிரிவு படையணி நுழைந்துள்ளது.
இன்னும் சில மணி நேரங்களில் நகர் முழுவதையும் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications