ஐஸ்வர்யாவை இழுக்கிறது சமாஜ்வாடி - மாதேபுராவில் போட்டி?
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 8 முதல் மே 15ம் தேதிக்குள் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து தேர்தல் ஜூரம் அனைத்து கட்சிகளையும் தொற்றி கொண்டுள்ளது. சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க துவங்கியுள்ளன.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி, தனது ஸ்டார் பவரை காட்ட படு மும்முரமாக காய் நகர்த்தி வருகிறது. லக்னோ தொகுதியில் சஞ்சய் தத் அல்லது அவரது மனைவி மான்யதாவை நிறுத்த அது முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் மாதேபுரா தொகுதியில் ஐஸ்வர்யா ராயை, போட்டியிட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
தற்போது பீகார் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஐஸ்வர்யாவை வைத்து ஓட்டை அள்ள அது திட்டமிட்டுள்ளது.
ஐஸ்வர்யா போட்டியிட வேண்டும் என்று அங்குள்ள அடிமட்டத் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றனராம்.
இதுகுறித்து அக்கட்சியின் பீகார் மாநில பாராளுமன்ற தேர்தல் குழு தலைவர் துள்சி சிங் கூறுகையில்,
ஐஸ்வர்யா மிகவும் பிரபலமான நடிகை. அவரை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் சமாஜ்வாடி கட்சிக்கு நெருக்கமான குடும்பத்தை சேர்ந்தவர்.
மாதேபுரா தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றார்.
சர்ச்சைக்குரிய ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி பப்பு யாதவின் தொகுதியான இதில் ஐஸ்வர்யா போட்டியிட்டால் 2.5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என அம்மாவட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் அங்கத் யாதவ், கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஐஸ்வர்யா பச்சனை வேட்பாளராக்கினால் லாலு பிரசாத் மற்றும் சரத் யாதவ் கட்சிகளை எளிதாக தோற்கடிக்கலாம் என எழுதியுள்ளார்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்













Click it and Unblock the Notifications