ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்க மெளன விரதப் போராட்டம் ரத்து
சென்னை: சென்னையில் இன்று நடப்பதாக இருந்த கருப்புக்கொடியுடன் மெளன விரதம் இருக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாகிகளான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து உயிர் நீத்த இளைஞர் முத்துக்குமாரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுவதால் அதில் கலந்து கொள்ளும் பொருட்டு இந்தப் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தப் போராட்டம் கடற்கரை காந்தி சிலை முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால காவல்துறை அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications