வைகோ, திருமா மீது நடவடிக்கை: தங்கபாலு கோரிக்கை
சென்னை: விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் வைகோ, திருமாவளவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளருமான கே.வி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு கூறுகையில்,
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில இடங்களில் சோனியா, பிரதமர் மன்மோகன் ஆகியோரின் உருவ படங்கள், காங்கிரஸ் கொடிகள் எரிக்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக காங்கிரஸ் கட்சி பெரும் தியாகம் செய்துள்ளது. ராஜீவ்காந்தி தனது உயிரையே பலி கொடுத்துள்ளார். இதைவிட வேறு தியாகம் செய்ய முடியாது. உருவ படங்களை எரிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
சில கட்சிகள் இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்துகிறது. போராட்டத்தின் மூலம் இப்பிரச்னைக்கு வெற்றி காண முடியாது.
முல்லைத் தீவு பகுதியில் உள்ள மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் இலங்கை பிரச்னையை முன் நிறுத்தி மக்களை குழப்பி அதன் மூலம், அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்கள்.
இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இதனால் அவர்கள் எதுவும் சாதிக்க போவதில்லை. சோனியாவின் கட்டளைப்படிதான் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று, போர் நிறுத்தம் செய்தார்.
உலக அளவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை நேரடியாக ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விளம்பரம் செய்பவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் சிங்களர்களுக்கு இணையாக அங்குள்ள தமிழர்கள் வாழவும், ஆட்சி உரிமைக்காவும் காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியே கூறியுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை தமிழர்களை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும்.
அங்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், விடுதலைப்புலிகள் அடைத்து வைத்துள்ள அப்பாவி தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்றார் தங்கபாலு.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications