For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொது வேலைநிறுத்தம்: 4ம் தேதி கடைகள் மூடல் - வெள்ளையன்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தின்போது தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், பிப்ரவரி 4ம் தேதியன்று தமிழகம் தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு இலங்கைத் தமிழர் பாதுகாபபு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதை ஏற்று அன்றைய தினம் கடைகள் அனைத்தையும் மூடி போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளோம்.

முத்துக்குமார் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு துணை நிற்கும் வகையில் இந்தப் போராட்டத்தில் வணிகர்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளோம் என்றார் வெள்ளையன்.

பாஜக ஆதரவு

இதற்கிடையே, பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X