5 வயது சிறுமியை மிருகத்தனமாக அடித்த 2 போலீசார் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உபி மாநிலம் எடாவா நகரில் திருட்டு வழக்கில் 5 வயது சிறுமியை கைது செய்து மிருகத்தனமாக அடித்து துன்புறுத்திய போலீசார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை கோமல் என்ற சிறுமி கடை ஒன்றில் 280 ரூபாய் திருடியதாக போலீசார் கைது செய்தனர். சிறு குழந்தை என்று கூட பாராமல் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்த சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 போலீசார் அவரை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

தலை முடியைப் பிடித்து தூக்கியும், தலை முடியைத் திருகியும், கொடூரமாக நடந்து கொண்ட போலீஸாரின் செயல் அதை நேரில் பார்த்த பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதை அங்கு இருந்த மற்ற 6 போலீசார் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர்.

இதுகுறித்து டிஜிபிக்குத் தகவல் போனது. இதையடுத்து சிறுமி என்றும் பாராமல் மிருகத்தனமாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் சந்திரபன் சிங், எஸ்.ஐ ஷாம்லால் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், நான் எனது மகளை 15 ரூபாய் கொடுத்து கடைக்கு அனுப்பினேன். அங்கு வேறு யாரோ பணத்தை திருடியதற்கு எனது மகள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+