அரீவா நிறுவனத்துடன் இந்தியா அணு உலைகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து
டெல்லி: பிரான்சை சேர்ந்த அரீவா நிறுவனத்துடன் இணைந்து மகாராஷ்டிராவின் ஜெய்தாபூர் நகரில் அணு உலை ஒன்று அமைக்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சியுடன், இந்தியா பாதுகாப்பு அம்ச ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இதையடுத்து 34 ஆண்டுகளாக அணுசக்தி தயாரிப்பில் தனிமைப்படுத்தப்பட்ட இந்தியா மற்ற நாடுகளில் இருந்து தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்தையம் பெற வழி ஏற்பட்டு விட்டது.
இந்த சூட்டோடு சூடாக, நேற்று இந்திய அரசு, பிரான்சை சேர்ந்த அரீவா என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒப்பந்தத்தில் இந்திய அணுசக்தி கழகம் மற்றும் அரீவா நிறுவன அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
இதன்படி மகாராஷ்டிராவின் ஜெய்தாபூரில் முதலில் இரண்டு அணு உலைகள் அமைக்க அரீவா உதவும்.
ஒவ்வொடு அணு உலையும் 1,650 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை ஆகும். அணு உலைகளின் எண்ணிக்கை பின்னர் 6 ஆக உயர்த்தப்படும்.












Click it and Unblock the Notifications