குழாயடிக் கூச்சலுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது: கருணாநிதி
சென்னை: மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய முக்கியமான நிலையில் உள்ள நான், குழாயடிக் கூச்சலுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது, பதிலளிக்கவும் விரும்பவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக செயற்குழு தீர்மானம் திருப்தி அளிக்கவில்லை. ராஜபக்சே கட்சி தீர்மானம் போல இது இருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார்.
இதுகுறித்து நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில்,
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை போன்ற ஒரு முக்கியமான சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள என்னால் குழாயடி கூச்சலுக்கு செவிசாய்க்க முடியாது, பதில் அளிக்கவும் விரும்பவில்லை.
இலங்கை பிரச்சினைக்காக ஆட்சியில் இருந்து விலகி விடுவோம் என்று செயற்குழுவிலே தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் அவர்களுக்கு எல்லாம் ஏமாற்றம் ஏற்பட்டிருக்காது.
என்ன செய்வது? ஈழத்தந்தை செல்வாவின் அன்புச்செல்வன் சந்திரஹாசன் இன்று எனக்கு எழுதியுள்ள கடிதத்திற்கும், இவர்களுடைய ஏமாற்றத்திற்கும் இடையே எவ்வளவு வித்தியாசம் என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications