Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவில் நிலங்களை பாதுகாக்க கோரி இந்து முன்னணி உள்ளிருப்பு போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கோவில் நிலங்களை பாதுகாக்க கோரி தாந்தோனி மலை கோவிலின் உள்ளே இந்து முன்ணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் புகழ் பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று தாந்தோனிமலை. இந்த கோவிலுக்கு தென் திருப்பதி என்ற சிறப்பு பெயரும் உண்டு.

இந்த கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் உள்ளது. அந்த நிலங்களில் உள்ளோர் மிக குறைந்த வாடகை கொடுத்து விட்டு அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் அரசியல்வாதிகள் உதவியுடன் கோவில் நிலத்தை விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் தாந்தோனிமலை கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தின் உள்ளே இந்து முன்னணி மாவட்டத் தலைவர் வக்கீல் செந்தில்குமார், செயலாளர் சுருளிராஜன், நிர்வாகிகள் அருண்ணாசலம் மற்றும் நிர்வாகிகள் சிலர் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கோவில் சூப்பிரெண்டு நரசிம்மராகவன், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் கோவிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில், கோவலிலுக்கு சொந்தமான நிலங்களின் பட்டியலை வெளியிட 3 மாத கால அவகாசம் , மற்றும் கோவில் நிலத்தின் பத்திர பதிவுகள் அனைத்தும் பத்திர பதிவு அலுவலகத்திற்கு அனு்பபி வைக்க வேண்டும் என்றும், கோவில் நிலம் பாதுகாக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+