போர் நிறுத்தம் கோரி சென்னையில் 10ம் தேதி பொதுக்கூட்டம்
சென்னை: சென்னையில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி வருகிற 10ம் தேதி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இதில், டாக்டர் ராமதாஸ், வைகோ, தொல். திருமாவளவன், பழ.நெடுமாறன், ஆர். நல்லகண்ணு, பாஜக பொதுச்செயலர் தமிழிசை செளந்தரராஜன், பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவுகள் குறித்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் போரை நிறுத்தக் கோரி எங்கள் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றது.
பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்காக நமது உணர்வுகளை வெளிப்படுத்துவது ஜனநாயக ரீதியிலான உரிமை. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால் அதன் பிறகும்கூட மிக அமைதியாக, ஜனநாயக நெறிகளுக்கு உள்பட்டு, போராடிய எங்கள் அமைப்பினர் பலர் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவியுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஏற்கெனவே அறிவித்தபடி எங்கள் அமைப்பின் சார்பில் தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் சனிக்கிழமை கறுப்புக் கொடி பேரணி நடத்தப்படும். பேரணியின் இறுதியில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் வகையில் சூளுரை மேற்கொள்ளப்படும்.
பேரணியில் அனைவரும் கறுப்புக் கொடிகளை மட்டுமே எடுத்து வர வேண்டும். எவ்வித அசம்பாவிதமும் இன்றி பேரணிகள் மிக அமைதியாக நடத்தப்பட வேண்டும்.
முத்துக்குமார் அஸ்தி ஊர்வலம்
இலங்கைத் தமிழர்களுக்காக தன் இன்னுயிரை ஈந்த இளைஞர் முத்துக்குமாருக்கு மக்கள் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அவரது அஸ்தி கலசங்கள் தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படும். இந் நிகழ்ச்சிகள் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இறுதியில் சென்னை, பூம்புகார், ராமேசுவரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், பவானி, முக்கூடல் ஆகிய இடங்களில் அஸ்தி கரைக்கப்படும்.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், எங்கள் அமைப்பின் நோக்கங்களை விளக்கியும் வரும் 10-ம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வது என்ற தீர்மானத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதிதான் முன்மொழிந்தார்.
அதுபோல் சட்டப்பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி, தில்லி பயணம் என அவர் மேற்கொண்ட எல்லா முயற்சிகளுக்கும் நாங்கள் உறுதுணையாக இருந்தோம்.
அதன் பிறகும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை.
முதல்வரையும் அழைத்தோம்
எனவேதான் நாங்கள் இந்த அமைப்பை ஏற்படுத்தினோம். எங்கள் அமைப்பின் கூட்டத்துக்கு முதல்வர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பினோம். ஆனால் நாங்கள் அழைக்கவில்லை என முதல்வர் கூறுவதில் உண்மையில்லை என்றார் நெடுமாறன்.
-
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications