இலங்கை ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்ட குடும்பத்தினர் - பலியானோர் குறித்து கவலை

விடுதலைப் புலிகளுடான போரின்போது பெருமளவிலான ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில் கல்மடுக்குளம் அணைக் கட்டை புலிகள் தகர்த்தபோது 5000க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பலியானதாக கூறப்பட்டது.
ஆனால் உயிரிழப்பு குறித்து ராணுவம் வாயே திறக்கவில்லை. அரசும் அதுகுறித்து ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
அவ்வப்போது புலிகள் தாக்கும்போது எத்தனை படை வீரர்கள் இறந்தனர் என்ற விவரத்தையும் ராணுவமோ, அரசோ தெரிவிப்பதில்லை.
தற்போது வன்னி பகுதியை கைப்பற்றுவதற்காக சிங்கள ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவம் நடத்தும் குண்டு வீச்சில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்.
விடுதலைப்புலிகளின் பதிலடி தாக்குதலில் ஏராளமான சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதலில் 800-க்கும் அதிகமாக சிங்கள சிப்பாய்கள் பலியாகி இருப்பதாகவும், மேலும் 700-க்கும் அதிகமான பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் கொழும்பு நகரில் உள்ள உயர் ராணுவ அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சிப்பாய்களின் உடல்கள் அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, போரில் கொல்லப்பட்ட மற்றும் காயம் அடைந்த வீரர்களின் உறவினர்கள் கொழும்பு நகரில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு சென்று முற்றுகையிட்டு, தங்கள் பிள்ளைகள், கணவன்மார் குறித்த விவரங்களை தருமாறு கேட்டு வற்புறுத்தினார்கள்.
மேலும் அனுராதபுரம், பொலநறுவ மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் படையினரை பார்க்க அனுமதிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2 மாதங்களுக்கு முன் வன்னியில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரிகளின் சம்பளம் மட்டுமே அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் ஆனால் சாதாரண வீரர்களின் மாதாந்திர சம்பளம் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே அவர்களுடைய உறவினர்கள் ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டதாகவும் அந்த ராணுவ அதிகாரி கூறினார்.
ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் நடத்திய இந்த முற்றுகைப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications