பென்ஷன் விவகாரம்: பதக்கங்களை திருப்பி கொடுக்க முன்னாள் ராணுவ வீரர்கள் முடிவு
டெல்லி: ஆறாவது ஊதியக் குழுவின் பென்ஷன் பரிந்துரையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதை காரணம் காட்டி தங்களுக்கு வழங்கப்பட்ட வீர விருதுகள் பதக்கங்களை குடியரசுத் தலைவரிடமே திருப்பி தர முன்னாள் ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர்கள் பெருமளவில் கலந்து கொண்ட பேரணி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள், ஒரே வேலை, ஒரே ஊதியம் என்ற கோஷத்தை எழுப்பினர். மேலும், ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரையில் தங்களுக்கு எந்த சாதக அம்சமும் இல்லை என்று குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து முன்னாள் படை வீரர்கள் கூறுகையில், வீரர்களுக்கு இடையே இருக்கும் பென்ஷன் வித்தியாசம் குறித்தும், ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரை தொடர்பாகவும் மத்திய அரசு தனது முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும்.
ஆறாவது ஊதிய குழுவின் அறிக்கை படி, ராணுவத்தில் ஒரே பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.
இதன்படி 1996க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு பென்ஷனும், 1996 முதல் 2005 வரை பணிபுரிந்தவர்களுக்கு ஒரு பென்ஷனும், 2006 முதல் 2008 செப்டம்பரில் ஓய்வு பெற்றவர்களுக்கு தனி பென்ஷனும், அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு இவர்கள் அனைவரையும் விட அதிக பென்ஷனும் வருகிறது.
அப்படி பார்க்கையில் 1996ல் ஓய்வு பெற்ற ஹவில்தாரின் பென்ஷன் 2006ல் ஓய்வு பெற்ற சாதாரண சிப்பாயை விட குறைவாக இருக்கிறது.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வரும் முன் எங்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதாக சொல்கிறார்கள். ஆனால் வந்தவுடன் கைவிட்டு விடுகின்றனர் என்றார்.
ஓய்வு பெற்ற கர்னல் கன்வர் பரத்வாஜ் என்பவர் கூறுகையில், எனது மகன் உமாங் பரத்வாஜ் கடந்த 2002ல் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு உயிர் துறந்தான். அவனுக்கு அளிக்கப்பட்ட சவுரிய சக்ரா விருது மற்றும் எனக்கு 1971ல் கொடுக்கப்பட்ட சேனா விருது இரண்டையும் ஜனாதிபதியை சந்தித்து திருப்பி கொடுக்க இருக்கிறேன்.
நாட்டை காக்கும் வீரர்களுக்கு அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எங்களின் வாழ்க்கை தரத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றனர் என்றார்.
முன்னாள் கடற்படை தலைவர் அட்மிரல் சுஷில் குமார் கூறுகையில், இந்தியாவின் தூண்களாக கருதப்படும் ராணுவ வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றார்.
முன்னாள் ராணுவ துணைத் தளபதி ராஜ் கட்யான் கூறுகையில், நான் பெற்றுள்ள பதக்கங்கள் எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை பெற்று தந்துள்ளன. ஆனால், எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை அவை ஜனாதிபதியிடம் இருப்பதே நல்லது என கருதுகிறேன் என்றார்.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications