வாஷிங்டனில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின விருந்து நிகழ்ச்சியின்போது அங்கு நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாஷிங்டன் நகரில், இலங்கைத் தூதரகம் சார்பில், அந்நாட்டு 61வது சுதந்திர தின விழா விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டுத் தூதர்க், பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கைத் தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருந்து நிகழ்ச்சிக்கு வந்த அனைவருமே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களைத் தாண்டித்தான் தூதரகத்திற்கு உள்ளே சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்த நாட்டையும், யாரையும் கண்டித்து அவர்கள் கோஷம் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications