சரத்குமார் கட்சி இன்று சென்னையி்ல் தேர்தல் பணிக்குழு கூட்டம்
சென்னை: நாடளுமன்றத் தேர்தல் பணி குறித்த சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டம் இன்று நடைபெறுவதாக அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
நமது கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் செய்ய வேண்டிய ஆயத்த பணிகளை மேற்கொள்ள கடந்த 4ம் தேதி முதல் மாவட்ட் அணி நிர்வாகிகளோடு ஆலோசனை செய்து வருகிறேன்.
இந்த ஆலோசனை கூட்டம் வரும் 11ம் தேதி வரை நடக்கும்.
சமத்துவ மக்கள் கட்சியின் வளர்ச்சி பணியில் தீவிரமாக செயல்படாத சில நிர்வாகிகளை மாற்றி உள்ளோம். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்பநாபனின் பொறுப்பு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜாராமனுக்கும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பொறுப்பை அரியலூர் மாவட்ட செயலர் ஜெ.கே.சிவாவும் கவனிப்பார்கள்.
கட்சியின் நிர்வாக வசதிக்காக நாமக்கல் மற்றும் கடலூர் மாவட்டத்தில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக கே.சுரேஷ்காந்தி, மேற்கு மாவட்ட செயலாளராக கே.சின்னதுரையும் செயல்படுவார்கள்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் மாநில அணி செயலாளர்கள் மற்றும் மாநில அணி துணை செயலாளர்கள் நேரடியாக வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பணிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவாக செயல்படுத்தவும், மாவட்டங்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்து அளிக்கவும், ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் பணிக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார் சரத்குமார்.
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications