சுபிக்ஷாவை சூறையாடிய ஊழியர்கள்!!
மும்பை: சம்பளம் தரக்கூட பணமில்லை என நிர்வாகம் கைவிரித்து விட்டதால் ஆத்திரப்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சுபிக்ஷா சில்லறை விற்பனை நிறுவனத்தின் 600 கிளைகளிலிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
நாடு முழுவதும் 1,600க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கும் சுபிக்ஷா நிறுவனத்துக்கு கடன் தர வங்கிகள் மறுத்துவிட்டதால் பெரும் நிதிச் சிக்கலுக்கு உள்ளாகிவிட்டதாகவும், இதனால் கடந்த 2 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் தரக் கூட பணமின்றி பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் சுபிக்ஷா நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.
இந் நிறுவனத்தில் உள்ள 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் எதிர்காலம் பற்றி உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சம்பளமின்றித் தவிக்கும் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர், தாங்கள் பணியாற்றிய கிளைகளைச் சூறையாடத் தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை 600 கிளைகளில் இந்த சூறையாடல் நடந்துள்ளதாகவும், இருக்கிற சொத்துக்களை சேதமடையாமல் காக்க, பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுபிக்ஷா தரப்பில் கூறப்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், சுபிக்ஷா குடோன்கள் பலவற்றை சூறையாடியவர்களே, அவற்றைப் பாதுகாக்க பணியில் அமர்த்தப்பட்டு, சம்பளம் தரப்படாததால் வெறுத்துப் போனவர்கள்தானாம்.
'பணியாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், காவலுக்கு இருந்தவர்களே சுபிக்ஷாவின் பல கிளைகளைச் சூறையாடியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகளும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
சுபிக்ஷா பெரிய நிறுவனம். இப்போது நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. வங்கிகள் கைவிரித்துவிட்ட இந்த சூழ்நிலையில் கைகொடுக்க முதலீட்டாளர்களை வரவேற்கிறோம்' என்று கூறியுள்ளார் சுபிக்ஷா நிறுவனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
15,000 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம்.. தமிழக அரசின் மெத்தனம்.. அப்போ சம்பள உயர்வு கிடையாது? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications