For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேற்று வன்னியில் 25 தமிழர்கள் குண்டு வீசிக் கொலை

By Sridhar L
Google Oneindia Tamil News

வன்னி: வன்னிப்பகுதியில் நேற்று இலங்கை விமானப்படை மற்றும் ராணுவம் நடத்திய கொடும் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 77 பேர் படுகாயமடைந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம், வள்ளிபுனம், சுதந்திரபுரம், மாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் பரவலாக எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலின் போது 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர். 4 சிறுமிகள் காயமடைந்தவர்களில் அடக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் பகுதியில் நேற்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 16 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 49 பேர் படுகாயமடைந்தனர்.

இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கியிருந்த கொட்டகைகளின் மீது எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன.

இந்தத் தாக்குதலில் ஒரு கொட்டகைக்குள் எறிகணை விழுந்ததில் அங்கு தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 தமிழர்கள் உயிரிழந்தனர்.

அதேபோல விமானப்படை நடத்திய கொடூரத் தாக்குதலில் 3 தமிழர்கள் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X