பங்குச் சந்தை: மீண்டும் டல்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மூன்று நாட்கள் தொடர்ந்து உச்சத்திலிருந்த இந்திய பங்குச் சந்தை இன்று மீண்டும் இறங்குமுகமானது.
வர்த்தகம் துவங்கியதிலிருந்தே எதிர்மறையாக இருந்தன பங்குகளின் விலைகள். சென்செக்ஸ் பரிவர்த்தனையில் கடைசி வரை நிலையற்ற தன்மையே காணப்பட்டது. நிப்டியிலும் இதே நிலைதான்.
சர்வதேச பங்குச் சந்தைகளின் நிலையற்ற தன்மை இன்றைய வர்த்தகத்தில் எதிரொலித்ததாலேயே, சந்தையில் இந்த நிலை நீடித்ததாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்க்சென், சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ், கொரியா போன்ற அனைத்து சந்தைகளிலும் இதே நிலைதான் இன்று நிலவியது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 29 புள்ளிகளை இழந்து 9618.54ல் நிலைபெற்றது சென்செக்ஸ். நிப்டி 8.8 புள்ளிகளை இழந்து 2925.70ல் முடிவுற்றது.












Click it and Unblock the Notifications