8 அதிமுக கவுன்சிலர்கள் நீக்கம்-ஜெ அதிரடி
சென்னை: கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடத்து கொண்டதாகக் கூறி கரூர் நகராட்சியைச் சேர்ந்த 7 அதிமுக கவுன்சிலர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் சிலர் செயல்பட்டுள்ளனர்.
அவர்கள், கரூர் நகராட்சியைச் சேர்ந்த எஸ்.பிரகாஷ், (32-வது வார்டு உறுப்பினர், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர்), பி.பூமிநாதன், (கரூர் நகர எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர்), எஸ்.சீனிவாசன் (27வது வார்டு உறுப்பினர் கரூர் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்), பி.ராஜா (3-வது வார்டு உறுப்பினர் கரூர் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர்), எஸ்.வளர்மதி (2-வது வார்டு உறுப்பினர்), எஸ்.கமலா (7-வது வார்டு உறுப்பினர்), ப.பானுமதி (10-வது வார்டு உறுப்பினர்), இ.முத்துசாமி (29-வது வார்டு உறுப்பினர்), கே.கணேசன் (33-வது வார்டு உறுப்பினர்).
அவர்கள் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப் படுகிறார்கள். கழக உடன் பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications