பெரியாறு அணையில் கேரள குழு 'ஆய்வு'-திருப்பி அனுப்பி தமிழக அதிகாரிகள்

அணையின் சில குறிப்பிட்ட பகுதிக்கு குழுவினர் செல்ல தமிழக அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பரபரப்பு கூடியது.
முல்லைப் பெரியாறு அணை கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த அணை தமிழக பொதுப் பணித் துறையின் முழு கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
இந்த அணை பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினமும் நேற்றும் விசாரணை நடைபெற்றது. இந் நிலையில், நேற்று காலை 10 மணிக்கு கேரள சட்டப் பேரவை உறுப்பினர்கள் 4 பேர் ராஜாஜி மாத்யு தாமஸ் (ஒல்லூர் தொகுதி) தலைமையில் சுற்றுச்சூழல் ஆய்வு நடத்துவதாகக் கூறிக் கொண்டு செய்ய அணைக்கு வந்தனர்.
அணைப் பகுதியில் ஆய்வு செய்த இந்த எம்எல்ஏக்கள் நீர்மட்டத்தை அளவிடும் அளவுகோல் 141 அடியில் இருந்ததைப் பார்த்ததும் டென்சனாயினர். நீர் மட்டம் 136 அடிக்கு மேல் போனால் அணை உடைந்துவிடும் என கேரளம் கதை விட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அளவுகோல் 141 என்று காட்டுவது தவறு என்றும், அணையில் நீர் மட்டம் 110 அடிதான் உள்ளது என்றும் புதிய கணக்கு கூறினர். இதைக் கேட்டு தமிழக அதிகாரிகள் சிரிக்கவே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அணையின் அடிப் பகுதியிலுள்ள 10 அடி கேலரிக்கும், 45 அடி கேலரிக்கும் கேரளக் குழுவினர் செல்ல முயன்றனர். ஆனால், கேலரிக்குள் தொழில்நுட்பக் குழுவினரையும், பொறியாளர்களையும் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறி தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதனால் கேரள குழுவினர் மீண்டும் தமிழக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக தரப்பினரும் விடாமல் வாக்குவாதம் செய்ததோடு அந்தப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து திரும்பி வந்த ராஜாஜி மாத்யு தாமஸ், கேலரிக்குள் எங்களை அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டால் பொறியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தமிழக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கான உத்தரவைக் காட்டுங்கள் என்று கேட்டால், வாய்மொழி உத்தரவு என்று கூறுகின்றனர். இது சட்ட விரோதமானது என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும் நிலையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் அங்கு வந்து சென்றுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ












Click it and Unblock the Notifications