சென்னை-சாப்ட்வேர் என்ஜீனியர் தீக்குளித்து தற்கொலை
சென்னை: சென்னையில் சாப்ட்வேர் என்ஜீனியர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த நான்கு நாட்களாக வேலைக்குப் போகாமல் இருந்ததால், அலுவலகத்திலோ அல்லது வேலையிலோ பிரச்சினை ஏற்பட்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் தினேஷ் (23). சாப்ட்வேர் என்ஜினீயர். திருமணமாகவில்லை. சென்னை அம்பத்தூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவில் இருக்கும் மேன்ஷனில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று மாலை 6 மணிக்கு தான் தங்கியிருந்த அறையை பூட்டிக்கொண்டு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துவிட்டார்.
வலி தாங்காமல் சத்தம் போட்டபடி அறைக்குள்ளேயே ஓடி சிறிது நேரத்தில் குளியலறையில் கருகி பிணமானார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். வடபழனி போலீஸார் விரைந்து வந்து திணேஷின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் இலங்கைப் பிரச்சினைக்காக திணேஷ் தீக்குளித்து விட்டதாக தகவல் பரவியது. பின்னர் இன்று காதலர் தினம் என்பதால், காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என பேச்சு எழுந்தது.
இருப்பினும் திணேஷ் எந்தக் கடிதத்தையும் எழுதி வைக்காததால், அவரது மரணம் மர்மமாக இருக்கிறது.
திணேஷுடன் தங்கியிருந்த நண்பரிடமும், அவரது சித்தப்பாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தினேஷ் கடந்த 4 நாட்களாக வேலைக்கு செல்லாமல் அறையிலே தங்கியிருந்தாகவும், முகவாட்டத்துடன் காணப்பட்டதாகவும் கூறினார்கள்.
மேலும் அடிக்கடி பல்வேறு நிறுவனங்களில் மாறி மாறி சேர்ந்துள்ளார். அலுவலகத்திலோ அல்லது வேலையிலோ ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications