முதியோர் இல்லத்தையும் தாக்கிய ராணுவம் - 79 தமிழர்கள் பரிதாப சாவு
வன்னி: இலங்கைப் படையினர் நேற்று முதியோர் இல்லத்தையும் சரமாரியாக வெறித்தனமாக தாக்கினர். இந்த கொடூரத் தாக்குதலில் நான்கு முதியவர்கள் உள்பட 79 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர். 172 பேர் படுகாயமடைந்தனர்.
கொல்லப்பட்ட முதியவர்களில் ஒருவருக்கு 101 வயதாகிறது. இன்னொருவருக்கு 99 என்பது வேதனைக்குரியது. மற்ற இருவருக்கும் முறையே 86,80 வயதாகும்.
அன்புச்சோலை மூதாளர் பேணலகம் என்ற அந்த முதியோர் இல்லத்தின் மீது நேற்று இலங்கை ராணுவம் பீரங்கிகளால் சரமாரியாக சுட்டுத் தள்ளியது.
இதில், கருப்பையா (101), வள்ளி ஆச்சி (99),பொன்னம்மா (80), இளையபிள்ளை (86) ஆகியோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
வேலாச்சி (97), செல்லையா (98),பழனி (79), கிருஷ்ணன் (80), இராஜேஸ்வரி (67), பராமரிப்பாளர் கருணாகரன் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட புது மாத்தளன் பகுதியில்தான் இந்த முதியோர் இல்லம் உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் சுற்றுப் பகுதிகளில் நடந்த விமான்படைத் தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன், தேவிபுரம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் மீது நேற்று எறிகணைத் தாக்குதல் நடந்தது. இதில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
மக்கள் பாதுகாப்பு வளைய பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று காலை நடந்த விமானத் தாக்குதலில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுமாத்தளன் நோக்கி நேற்று இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் நடந்த ஆர்ட்டில்லரி, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 12 சிறார்கள் உள்பட 18 தமிழர்கள் படுகொலையானார்கள்.
புதுக்குடியிருப்பில் நேற்று இரவு 9.50 முதல் 10.15 வரை எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 தமிழர்கள் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications