சென்செக்ஸ்-இன்றும் சரிவு
மும்பை: 25 ஆண்டுகளுக்குப் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொடுத்த ஷாக்கிலிருந்து இன்னமும் பங்குச் சந்தை மீளவே இல்லை.
நேற்று 330க்கும் அதிகமான புள்ளிகளை இழந்து சரிந்திருந்த பங்கு வர்த்தகம், இன்று மேலும் 270 புள்ளிகளை இழந்து தடுமாறியது. மீண்டும் 9000 புள்ளிகளுக்கும் கீழே போனது சென்செக்ஸ்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 71 புள்ளிகள் குறைந்து 2800-க்கும் கீழ் நிறைவுற்றது.
டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, டிஎல்எப், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின.
பெரும்பாலான முதலீட்டாளர்கள், தங்களிடம் உள்ள பங்குகளை எப்படியாவது தள்ளிவிடுவதில் குறியாக இருந்ததால் பெரிய நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தன.
இந்த ஆண்டு முழுவதும் பொருளாதாரம் மோசமான நிலையில்தான் இருக்கும் என்று நிதியமைச்சர் தெரிவித்ததால், நம்பிக்கையிழந்த முதலீட்டாளர்கள், பங்குகளை விற்று வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications