தொலைநோக்கற்ற பட்ஜெட்: ஜெ. கருத்து
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக பட்ஜெட்டால் ஏழை, எளிய மக்களுக்கு பயனில்லை. தமிழக முன்னேற்றத்தின் முதுகெலும்பை முறிக்கக்கூடிய, தமிழ்நாட்டை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய, தொலைநோக்குப் பார்வையில்லாத, ஆரோக்கியமற்ற நிதிநிலை அறிக்கை இது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
தரத்தை உயர்த்தும் பட்ஜெட்-காங்:
தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறுகையில், தமிழக பட்ஜெட் மிகவும் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாய கடனுக்கு வட்டி இல்லை என்பது மிக சிறந்த அறிவிப்பு ஆகும். மொத்தத்தில் ஏழை, எளியோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பட்ஜெட் என்று கூறியுள்ளார்.
ஏறக்குறைய சரியாக உள்ளது!!!!-பாமக:
பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில்,
பா.ம.க. தயாரித்த நிழல் அறிக்கை வரவு-செலவு திட்டமும் தமிழக அரசு தயாரித்துள்ள வரவு-செலவு திட்டமும் ஏறக்குறைய சரியாக உள்ளது.
வேளாண்மைக்கு தனி வரவு-செலவு திட்டம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் நிறை வேற்றப்படவில்லை.
மொத்தத்தில் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
வேதனை வேதனை-மதிமுக:
சட்டமன்ற மதிமுக தலைவர் கண்ணப்பன் கூறுகையில், இந்த பட்ஜெட் ஏழை எளியோர்களுக்கு பயன்தரும் வகையில் அமைய வில்லை. இன படுகொலையை கண்டிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. மொத்தத்தில் தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என்று விமர்சித்துள்ளார்.