இலங்கை விவகாரம்: சிதம்பரம் பேச்சு வேதனை தருகிறது - நல்லகண்ணு
நாகை: இலங்கை விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேச்சு வேதனை தருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.
நாகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய அரசின் பட்ஜெட், மற்றும் தமிழக அரசின் பட்ஜெட்கள் தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.
இரண்டு பட்ஜெட்களிலும் நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்யும் வகையில் எந்த வித திட்டங்களும் இல்லை. மேலும் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை.
தமிழக பட்ஜெட்டில் நில வரி ரத்து செய்திருப்பதை வரவற்கிறோம்.
அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட விவசாயிகள் வங்கியில் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும். கடனை முழுமையாக செலுத்தினால் வட்டி ரத்து என்பது ஏற்புடையது அல்ல.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பம் கருத்து தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களை வேதனைப்படுத்துவதாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications