விமானிக்கான எழுத்துத் தேர்வில் தேர்வில் இளவரசர் ஹாரி தோல்வி

இளவரசர் ஹாரி இங்கிலாந்து ராணுவத்தில் இணைந்துள்ளார். தற்போது 2 ஆண்டு பைலட் பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். தற்போது அவருக்கு விமானிக்கான தேர்வு தொடங்கியுள்ளது. இதில் முதல் தேர்வில் அவர் தோல்வியடைந்து விட்டார்.
இதனால் ஹாரி மனச் சோர்வடைந்துள்ளாராம். ஹாரிக்கு அடுத்தடுத்து கிடைத்துள்ள 3வது அடி இது.
முதலில் சக ராணுவ வீரரை பாகி என்று அழைத்து ஆசியர்களின் கோபத்துக்கு ஆளானார். பின்னர் அவரது நீண்ட நாள் காதலியான செல்சி டேவி, ஹாரியை விட்டு கடந்த மாதம் பிரிந்தார். இப்போது விமான பயிற்சித் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு ராணுவ அதிகாரிகள் கூடுதல் பயிற்சி கொடுக்கவுள்ளனர். இதன் மூலம் அடுத்த தேர்வில் அவர் வெற்றி பெறலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லிங்கன்ஷயர் விமான தளத்தில் நடந்த எழுத்துத் தேர்வில் ஹாரி தோல்வியடைந்து விட்டாலும் கூட அதில் தேறி விட அவருக்கு நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன என்று ராயல் ஏர் ஃபோர்ஸ் தகவல்கள் கூறுகின்றன.
தற்போது ஹாரிக்கு கூடுதல் டியூஷன் வகுப்புகள் நடைபெறவுள்ளனவாம்.
ஹாரிக்கு, அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை செலுத்த வேண்டும் என்பதே கனவாக உள்ளது. அதிலும் போர் முனையில் அந்த ஹெலிகாப்டர்களை செலுத்த வேண்டும் என்றும் தீவிரமாக உள்ளார்.
ஒரு வேளை அவர் விமானிக்கான தேர்வில் வெற்றி அடைந்தாலும் கூட, அவருக்கு தாக்குதல் ஹெலிகாப்டர்களை செலுத்த அனுமதி கிடைக்காதாம். சாதாரண ரக லிங்க்ஸ் அல்லது கெஸல் ரக ஹெலிகாப்டர்களே முதலில் தரப்படுமாம். அவரது செலுத்தும் திறனைப் பொறுத்தே பிற ஹெலிகாப்டர்களைத் தருவார்களாம்.












Click it and Unblock the Notifications