லண்டனில் சிங்களர்கள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: உலகெங்கும் தமிழர்களின் போராட்டம் பெரிய அளவில் நடந்து வரும் நிலையில் லண்டனில் பிரதமர் இல்லம் உள்ள டெளனிங் தெருவுக்கு எதிரே சில ஆயிரம் சிங்களர்கள் கூடி போராட்டம் நடத்தி மனு அளித்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரக் கூடாது, என்று கோரி தீவிரவாதத்திற்கு எதிரான இலங்கை குடிமக்கள் என்ற பெயரில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினரில் சிலர் பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.
சிறப்புத் தூதரை அனுப்பும் முடிவை பிரதமர் கார்டன் பிரவுன் கைவிட வேண்டும், தவறான ஆலோசனைகளைக் கேட்டு இலங்கை அரசுக்கு விரோதமாக செயல்படக் கூடாது என்று அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications