சோனியா கைவிரித்து விட்டார் - பிரணாப் பதில் ஏமாற்றம்: போராட்டம் தொடரும் - ராமதாஸ்
சோனியா கைவிரித்து விட்டார் - பிரணாப் பதில் ஏமாற்றம்: போராட்டம் தொடரும் - ராமதாஸ்
டெல்லி: இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நேற்று மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது பதில் திருப்தி தரவில்லை. ஏமாற்றமளிக்கிறது. சோனியா காந்தியும் கைவிரித்து விட்டார். எனவே எங்களது போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.
டெல்லி சென்றிருந்த டாக்டர் ராமதாஸ் முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து பேசினார். அப்போது, இதுகுறித்து பிரணாப் முகர்ஜியிடம் பேசுங்கள் என்று சோனியா அறிவுறுத்தினார்.
இதையடுத்து நேற்று பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார் ராமதாஸ். முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், ராமதாஸை சந்தித்து இலங்கை குறித்து விளக்கினார்.
பிரணாப் முகர்ஜியை சந்தித்து விட்டு வெளியே வந்த ராமதாஸ், பிரணாப் பேச்சு தனக்கு திருப்தி தரவில்லை, பெரும் ஏமாற்றத்தையே அளித்ததாகவும், இந்த விவகாரத்தில் அவர் கைவிரித்து விட்டார் எனவும் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணனையும் நான் சந்தித்து இலங்கை பிரச்சினை பற்றி பேசினேன். அவர்களுடைய பதில் சாதகமாக இருந்தது.
பிரணாப்முகர்ஜியை சந்தித்து பேசினேன். இலங்கையில் நடக்கும் போரை பற்றியும் அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதையும் விளக்கி அவரிடம் 5 பக்க கோரிக்கை மனுவை கொடுத்தேன்.
எங்களை பொறுத்த வரை இலங்கையில் ராஜபக்சே அரசு எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் உடனே போர்நிறுத்தம் செய்ய வேண்டும். அந்த போர்நிறுத்தத்துக்கு இந்தியாவும் சர்வதேச சமூகமும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
பிரணாப் பதில் ஏமாற்றம்
ஆனால் இப்போதுள்ள நிலையில் இலங்கையில் போரை நிறுத்த வழியில்லை என்று பிரணாப்முகர்ஜி கூறினார். அவர் அளித்த பதில் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது.
இலங்கை பிரச்சினை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பா.ம.க. சார்பில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
கைவிரித்து விட்டார் சோனியா
இந்த நிலையில் தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய டாக்டர் ராமதாஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் ராணுவ ஆட்சி அமைக்க சதி நடக்கிறது என சோனியா காந்தியிடம் கூறியதற்கு அது அவர்கள் நாட்டின் உள்பிரச்சினை. இதில் எப்படி தலையிடுவது என கூறி கைவிரித்து விட்டார்கள்.
போராட்டம் தொடரும்
எனவே மீண்டும் போராட்டத்தை தொடர்ந்து நடத்த உள்ளோம். இன்று பாராளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையின் கீழ் பா.ம.க. எம்.பி.க்கள் காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவார்கள் என்றார் ராமதாஸ்.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications