For Daily Alerts
Just In
நெல்லை உள்பட 6 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடமாற்றம்
சென்னை: நெல்லை, தூத்துக்குடி உள்பட 6 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட உத்தரவு:
- அரியலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றும் ஆர்.சுடலைக்கண்ணன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக அனில் மேஷ்ராவுக்கு பதிலாக மாற்றப்படுகிறார்.
- அனில்மேஷ்ரா அரியலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
- தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆர்.பழனியாண்டி நெல்லை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
- நெல்லை மாவட்ட கலெக்டர் ஜி.பிரகாஷ் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
- திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆர்.வாசுகி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.
- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்.கிரிலோஷ்குமார் திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, February 19, 2009, 9:27 [IST]