டிவி நிருபர் படுகொலை-தலிபான் அட்டூழியம்
இஸ்லாமாபாத்: பாகி்ஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்துவிட்ட தலிபான்கள் அங்கு டிவி நிருபர் ஒருவரைக் கொன்று தங்களது 'புத்தி'யைக் காட்டியுள்ளனர்.
பாகிஸ்தானின் ஜியோ டிவியின் நிருபரான மூசா கான், மட்டா என்ற இடத்தில் நடந்த தலிபான் பேரணியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். பின்னர் அவரை கழுத்தையும் அறுத்துக் கொன்றுள்ளனர்.
தலிபான்களுக்குள் உள்ள சில பிரிவுகளின் தலைவர்கள், இந்தப் பகுதியின் பிற தலைவர்கள் சந்தித்து பேச இருந்ததையடுத்து அது குறித்து செய்தி சேகரிக்க மூசா கானை ஜியோ டிவி அனுப்பியிருந்தது.
இந்த சந்திப்புக்கு முன் நடந்த பேரணியி்ல் வைத்து அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது ஸ்வாட் பகுதியில் தலிபான் செய்யப் போகும் கொடுமைகளுக்கு ஒரு முன்னோடியாகவே கருதப்படுகிறது.
இந்தப் பகுதியி்ல் நடக்கப் போகும் அடக்குமுறைகள் குறித்து செய்திகள் வெளியிட எந்த செய்தியாளரும் உள்ளே வரக் கூடாது என்ற எச்சரிக்கையாகவே இந்தக் கொலை நடந்துள்ளதாகக் கருதப்படுகிறது.