தமிழகத்தில் 11 எஸ்.பிக்கள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் 11 காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை புறநகர் காவல் ஆணையகத்தைச் சேர்ந்த அம்பத்தூர், மாதவரத்திற்கு புதிய துணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:
- மதுரை நகர தலைமையக துணை ஆணையர் ஜெ.ராஜேந்திரன், தேனி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதுவரை தேனி மாவட்ட எஸ்.பி. ஆக இருந்து வந்த ஆர்.சுதாகர், தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
- தர்மபுரி மாவட்ட எஸ்.பி. நஜ்முல் கோடா, அரியலூர் மாவட்ட எஸ்.பி. ஆக பதவி மாற்றப்பட்டுள்ளார்.
- திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் ஆர்.சின்னசாமி, திருச்சி ரயில்வே எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருச்சி ரயில்வே எஸ்.பி. எஸ்.ராஜேந்திரன், திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
- புதுக்கோட்டை எஸ்.பி. பி.மூர்த்தி, சென்னை வணிக குற்ற சி.ஐ.டி. போலீஸ் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வணிக குற்ற சி.ஐ.டி. போலீஸ் கண்காணிப்பாளர் எஸ்.சாந்தி, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக மாற்றப்படுகிறார்.
- கரூர் மாவட்ட எஸ்.பி. சாமுண்டீஸ்வரி, சென்னை நிர்வாக உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.தினகரன், கரூர் மாவட்ட எஸ்.பியாக மாறப்பட்டுள்ளார்.
- சென்னை பொருளாதார குற்றப்பிரிவு சூப்பிரண்டு ஆனி விஜயா, மாதவரம் துணை ஆணையராகவும், சென்னை சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. எஸ்.பி. சமுத்திரபாண்டி, அம்பத்தூர் துணை ஆணையராகவும் பதவி வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications