For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருத்துறைப்பூண்டி-கோவிலில் மரகதலிங்கம் கொள்ளை!

By Sridhar L
Google Oneindia Tamil News

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் உள்ள புகழ்பெற்ற பிறவி மருந்தீசர் கோயிலின் கதவை உடைத்து மரகத லிங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் புகழ் பெற்ற பிறவி மருந்தீசர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்தில் சக்தி வாய்ந்த மரகத லிங்கம் இருந்தது. இதனால் இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

நேற்று முன் தினம் இரவு கோயில் வழக்கமான பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, இரவில் கோயிலின் நடை சாத்தப்பட்டது. இந்த கோயிலுக்கு முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ண மூர்த்தி, மற்றும் சங்கர் என்பவர்கள் பாதுகாவலர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் கோயிலின் அர்ச்சகர்கள் காலை கோவிலை திறந்து பார்த்த போது கோயிலின் மடப்பள்ளி ஜன்னலை உடைக்கப்பட்டு, தியாகராஜர் சன்னதியில் இருந்த விலை மதிக்க முடியாத மரக லிங்க சிலை கொள்ளை போனது தெரியவந்தது.

மரகத லிங்கத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X