மார்ச் முதல் வாரத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு?
டெல்லி: மார்ச் முதல் வாரத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
லோக் சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகியுள்ளது.
இதுதொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் கடந்த மாதம் தொடங்கின. முதலில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி மற்றும மற்ற இரு தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடனும், அதைத் தொடர்ந்து மாநிலத் தலைமைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைவர்களுடனும் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மத்திய உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தாவுடன் தேர்தல் ஆணையர்கள் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதையடுத்து மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல கட்டமாக தேர்தல் நடத்துவதை விட ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதே நல்லது என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஒரே கட்ட வாக்குப் பதிவுக்கு வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. எனவே இரு கட்ட வாக்குப்பதிவு அல்லது அதிகபட்சம் 3 கட்ட வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூட் மாறுதே! இந்தியாவிடம் உதவி கேட்கும் ஈரான்? மிட்நைட்டில் போனை போட்ட சயீத்! ஜெய்சங்கர் சொன்ன தகவல் -
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்: எகிறி அடித்த பாஜக.. வரலாறு மாறுதே! மும்பையின் புதிய மேயர் யார்? -
மும்பையை கைப்பற்றிய பாஜக.. தாக்கரே சகோதரர்களின் முயற்சி வீண்! -
30 ஆண்டு பிடியை மேலும் இறுக்கும் உத்தவ் அணி.. மும்பையை வசப்படுத்த போட்டி! விட்டுக்கொடுக்காத பாஜக -
இரவோடு இரவாக எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ட்ரோன்கள்.. ஒரே வாரத்தில் 3வது சம்பவம்.. பதற்றம்! -
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்: கவுரி லங்கேஷ் கொலையில் சம்பந்தப்பட்டவர்.. சுயேட்சையாக நின்று வெற்றி -
கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் தள்ளுபடி குட்நியூஸ் எப்போ? கடலூர் சங்கங்களில் அடமானம் வைக்க தடை? -
தங்கம் விலை உயர்வால் தமிழகத்தில் ‘நகை சேமிப்புத் திட்டங்கள்’ முடங்கும் அபாயம்.. ஏன் தெரியுமா? -
“அடேங்கப்பா.. ஒரே நாளில் அதிவேக விசாரணை”.. ஜனநாயகன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொன்ன மேட்டர்! -
தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய விஜய்.. ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் இன்னும் சைலண்ட்! -
டானுக்கெல்லாம் டான்! உலகின் சக்திவாய்ந்த கடற்படை! இந்தியாவை மிஞ்சிய குட்டி நாடுகள்! அப்போ பாக்.,? -
சிறகடிக்க ஆசை: போலீஸிடம் சிக்கிய மனோஜ்! மீண்டும் வீட்டுக்கு வந்த ரோகிணி, விஜயாவுக்கு இது தேவைதான்












Click it and Unblock the Notifications