தடையை மீறி நாளை உயர்நீதிமன்றத்திற்குள் நுழைய வக்கீல்கள் முடிவு

சென்னை மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கத்தின் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் பால் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், உயர்நீதிமன்றத்திற்குள் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி நாளை உள்ளே நுழைய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், வக்கீல்கள் மீது தடியடி நடத்தி, வன்முறை வெறியாட்டம் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
உயர்நீதிமன்றம் தற்போது தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயா உத்தரவின் பேரில், போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளன. கோர்ட் பணியாளர்களைத் தவிர மற்ற யாரும் உள்ளே நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் நாளை தடையை மீறி உள்ளே நுழையப் போவதாக வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை












Click it and Unblock the Notifications