நாளை டெல்லியி்ல் சரத்குமார் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையி்ல அக்கட்சியினர் நாளை டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவும், அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தலைவர் சரத்குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியில் நாளை (25ம் தேதி) நடைபெற இருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகளும், அனைத்து மாவட்ட செயலாளர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications