சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.
நேற்று பிற்பகலில் ஸ்டான்லி மருத்துவமனையின் 4வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.
தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் போனது. அதற்குள் மருத்துவமனை ஊழியர்களும் தீயை அணைக்கும் முயற்சியி்ல் இறங்கினர். சிறிது நேரத்தில் தீ அணைக்கப்பட்டு விட்டது.
இந்த திடீர் தீவிபத்தில் படுக்கைகள், மேசைகள் உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகி விட்டன.
தொடர்ந்து மின்விசிறி ஓடியதால் சூடாகி தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications