பாஜக முன்னிலை-முக்கிய மாநிலம் தமிழகம்: கருத்துக் கணிப்பு
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கைப்பற்றும். இருந்தாலும் தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கிடைக்கும் தேர்தல் முடிவுகளை வைத்து தான் இறுத் முடிவுக்கு வர முடியும் என எகானாமிக் அன்ட் போலிட்டிக்கல் என்ற வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே பெரிய வேறுபாடு இருக்காது. சிறு சிறு மாற்றங்களால் கிடைக்கும் ஓட்டுக்களின் மூலம் இக்கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் கைப்பற்றும் ஒன்று, இரண்டு கூடுதல் தொகுதிகள் மாற்றத்தை சிறிய மாற்றதையே கொண்டு வரும்.
சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்த இடங்களை வைத்து பார்த்தால் பாஜக கூட்டணி, காங்கிரசை விட அதிக செல்வாக்குடன் இருக்கிறது.
கர்நாடகா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், காஷ்மீர், ராஜஸ்தான், டெல்லி, மிசோரம், நாகலாந்து போன்ற மாநிலங்களில் மொத்தம் 116 தொகுதிகள் உள்ளன.
இதில் 72க்கும் அதிகமாக தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் பாஜக வலுவான நிலையில் உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ளும் ஆந்திரா, ஹரியானா, சிக்கிம், ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அனைத்தும் எப்போதும் ஆளுங்கட்சிக்கு எதிராக ஓட்டளிக்கும் மாநிலங்கள் என சொல்ல முடியாது.
இங்கு பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.
இந்த மாநிலங்களில் ஆந்திராவில் சிரஞ்சீவியின் பிரஜ்ஜா ராஜ்யம், ஹரியானாவில் பஜன் லாலின் ஜன்கித் காங்கிரஸ் ஆகியவற்றின் தாக்கத்தை வைத்து தான் காங்கிரசின் நிலைமையை முடிவு செய்ய முடியும்.
ஜார்க்கண்ட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும், ஓரிஸ்ஸாவிலும் ஆளுங்கட்சிகள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன.
உத்தரகண்ட், குஜராத், பஞ்சாப் மற்றும் பிகார் என பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் 84 தொகுதிகள் உள்ளன. இதை பாஜக எளிதாக தக்கவைத்துக் கொள்ளும்.
மொத்தத்தில் பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு அதிகம் என்றாலும் தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கிடைக்கும் முடிவை வைத்தே யார் வெல்வது என்பது இறுதியாகும் என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு.












Click it and Unblock the Notifications