பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு ஜாதிச் சான்று!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் ஜாதி சான்றுகள் உள்ளிட்ட முக்கிய சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் மூலம் பள்ளியிலே வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சவுண்டையா உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக ஜாதிச்சான்று, வருவாய்சான்று, இருப்பிடச்சான்று போன்றவைகள் தேவைப்படுகின்றன.
அவைகளைப் பெற தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தால் கிடைப்பதற்கு பல நாட்களுக்கு மேலாகிவிடுகிறது. இதனால் மாணவர்களுக்கு கால விரையம் மற்றும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுகின்றன.
இவைகளை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளிலேயே ஜாதிச்சான்று, வருவாய்சான்று, இருப்பிடச்சான்று வழங்குமாறு மாவட்ட கலெக்டர் சவுண்டையா அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சான்றிதழ்களை பெற மாணவர்கள் தலைமை ஆரிசியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியை நல்ல முன்னுதராணமாக கொண்டு மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்பெறுவார்கள். கவனிக்கமா தமிழக அரசு...












Click it and Unblock the Notifications