For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரி: பின்லாந்து பெண்ணை கற்பழிக்க முயற்சி

By Sridhar L
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பின்லாந்து நாட்டுப் பெண்ணைக் கற்பழிக்க முயற்சி நடந்துள்ளது.

பின்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஷரின்கஸ்ட். இவர் தனது மனைவி டொகின்கஸ்ட், மகள் ஹெலன்கா ஆகியோருடன் கடந்த 22ம் தேதி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார்.

அங்குள்ள பிரபல ஓட்டலில் அறை எடுத்து தங்கிய இவர்கள் கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல இடங்களையும் சுற்றி பார்த்து வந்தனர்.

நேற்று முன்தினம் 24ம் தேதி இவர்கள் கன்னியாகுமரி அருகேயுள்ள வட்டக்கோட்டைக்கு சென்றனர்.

வட்டகோட்டையை ஓட்டியுள்ள இயற்கை கொஞ்சும் கடற்கரை கண்டு ரசிக்க ஷரின்கஸ்ட் தனது மனைவி மற்றும் மகளுடன் குளித்து மகிழ்ந்தார்.

வட்டகோட்டை கடலில் குளித்த அவர்களின் மனதுக்கு மிகவும் இதமாக இருந்ததால் ஷரின்கஸ்டின் மனைவி மற்றும் மகள் மீண்டும் அங்கு சென்று குளிக்க விரும்பினார்.

ஆனால் ஷரின்கஸ்ட் தனக்கு களைப்பாக இருப்பதாக கூறி மனைவி மற்றும் குழந்தைகளை ஓரு காரில் வட்டகோட்டைக்கு அனுப்பி வைத்தார்.

டெரின்கஸ்ட் மற்றும் அவரது மகள் ஹெலன்கா ஆகியோர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். இதனை கண்ட வாலிபர்கள் 4 பேர் இளம்பெண் ஹெலன்காவை பலாத்காரம் செய்ய முயன்றனர்.

அவர் சத்தம் போடவே அருகில் குளித்துக் கொண்டிருந்த அவரது தாயார் ஓடி வந்து வாலிபர்களிடம் இருந்து மகளை காப்பாற்ற முயன்றார். உடனே அந்த வாலிபர்கள் அவரை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

உடனடியாக அங்கிருந்து பதட்டத்துடன் கார் மூலம் கன்னியாகுமரி திரும்பிய அவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X