For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பர்மா தமிழர்கள் 2,650 பேருக்கு இலவச பட்டா

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: பர்மா தமிழர்களின் நீண்டகால கனவாக இருந்த இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் முக ஸ்டாலின் இன்று நடக்கும் விழாவில் வழங்குகிறார்.

சென்னையில் இந்திரா நகர், வியாசர்பாடி, சாஸ்திரி நகர், பக்தவச்சலம் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 42 ஆண்டுகளுக்கு பர்மாவில் இருந்து வந்த தமிழர்கள் குடியேறினர். தங்களுக்கு குடியிருக்க சொந்த வீடு வேண்டும் என்பதற்காக அவர்கள் அரசிடம் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 2,650 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை இன்று மாலை வியாசர்பாடி அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் விழாவில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.

ஒவ்வொருவருக்கும் தலா மூன்று சென்ட் வீட்டு மனை வழங்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X