போலீஸ் ஏட்டுக்கு அடி உதை - இருவர் கைது
நாகை: நாகப்பட்டனத்தில் தலைமைக் காவலரை அடித்து உதைத்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை கீரைக் கொல்லை தெருவைச் சேர்ந்தவர் தம்பா என்கின்ற முருகானந்தம்(38). ஆட்டோ டிரைவர்.
இவர் தனது ஆட்டோவில் சவாரி ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்தாதக கூறி ஆட்டோவை பறிமுதல் செய்து வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், தம்பா தனது உறவினர் கார்த்திகேயன் என்பவருடன் வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று ஆட்டோவை திருப்பிதர வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு காவல் நிலையத்தில் இருந்த ஏட்டு மாரியப்பன் மறுத்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த அவர்கள் இருவரும் திடீரென ஏட்டு மாரியப்பனை காவல் நிலையத்திலே அடித்து உதைத்தனர்.
இது குறித்து ஏட்டு மாரியப்பன் தான் பணி புரியும் காவல் நிலையத்திலேயே புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தம்பாவையும், கார்த்திகயனையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications