423 மணி நேரத்தை வீணடித்த எம்பிக்கள்

கடந்த 2004ம் ஆண்டு மே 17ம் தேதி 14வது லோக்சபாவின் முதல் கூட்டம் கூடியது. நேற்று கடைசி நாள் கூட்டம் முடிவடைந்தது.
மொத்தம் 15 கூட்டத் தொடர்கள் இதில் இடம் பெற்றன. 332 முறை லோக்சபா கூடியது. மொத்தம் 258 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இது இதுவரை இல்லாத அதிக பட்ச அளவாகும்.
1,738 மணி நேரமும், 45 நிமிடங்களும் அலுவல்கள் நடந்தன. ஆனால் எம்.பிக்கள் செய்த அமளி, துமளி, போராட்டம் உள்ளிட்ட இடையூறுகளால் 423 மணி நேரம் இதில் வீணடிக்கப்பட்டது.
கடைசி நாளான நேற்றும் கூட பெரும்பாலான உறுப்பினர்கள் சபைக்கு வரவில்லை. பல இருக்கைகள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன. பல அமைச்சர்களையும் நேற்று லோக்சபாவில் பார்க்க முடியவில்லை.
நேற்றைய கடைசி நாள் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்கள் பேசினர்.
'வாய் பார்த்த' 15 எம்.பிக்கள்!
14வது லோக்சபாவில் 15 எம்.பிக்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. வெறுமனே வந்து போய் சாதனை படைத்துள்ளனர் இவர்கள். முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவும் இவ்வாறு மற்றவர்கள் பேசுவதை வாய் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் ஆவார்.
நடிகர் தர்மேந்திரா வாய் பார்த்த எம்.பிக்களில் ஒருவர். படங்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசிய இவர் கன்னிப் பேச்சு எனப்படும் முதல் பேச்சைக் கூட இந்த அவையில் பதிவு செய்யவில்லை. அதாவது தர்மேந்திரா ஒரு முறை கூட அவையில் பேசியதே இல்லை. இவர் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் தொகுதி எம்.பி ஆவார்.
கன்னட நடிகர் அம்பரீஷும், வாய் பார்த்த எம்.பிக்களில் ஒருவர். கர்நாடக மாநிலம் மான்டியா தொகுதியின் காங்கிரஸ் எம்.பியான இவரும் லோக்சபாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
சட்டவிரோத விசா மோசடியில் சிக்கி பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்ட குஜராத் எம்.பி. பாபுபாய் கீமா பாய் கதாரா, பீரன் சிங் எங்க்டி, மாணிக்ராவ் ஹோடில்யா காவிட், பலிராம் காஷ்யப், சோஹன் போடாய், சோமாபாய் காந்தாலால் கோலி படேல், சிவசேனா எம்.பி. ஆனந்த் பிரகாஷ் பரஞ்ச்பே, பேனி பிரசாத் வர்மா, சலீம் இக்பால் ஷெர்வானி, பகுஜன் சமாஜ் கட்சியின் பீஷ்ம சங்கர், அக்ப்ர அகமது டம்பி, கன்வார் சர்வார் சிங், லட்சுமண் ராவ் பாண்டுரங்க பாட்டீல், முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் என இந்தப் பட்யில் நீளுகிறது.
கேள்வி கேட்காத சோனியா - அத்வானி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் பேசியுள்ளனர். ஆனால் ஒரு கேள்வி கூட இவர்கள் கேட்டதில்லை.
அதேபோல ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, எம்.பியாக இருந்தபோது ஒரு கேள்வி கூட கேட்டதில்லை.
காங்கிரஸ் எம்.பி. ஜிதீன் பிரசாதா 6 கேள்விகள் கேட்டுள்ளார். ராகுல் காந்தி 5 கேள்விகள் கேட்டுள்ளார்.
நடிகர் ராஜ் பாபர் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து கேள்விகள் கேட்டுள்ளார். வினோத் கண்ணா நான்கு கேள்விகள் கேட்டுள்ளார்.
காங்கிஸ் கட்சியின் சச்சின் பைலட் ஒரே ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
நான் ரொம்ப பிசி - அகிலேஷ்
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏன் சபையில் பேசவே இல்லை என்ற கேள்விக்கு அகிலேஷ் யாதவ் கூறுகையில், அடுத்த முறை கண்டிப்பாக பேசுவேன். இந்த முறை கட்சிப் பணிகளில் பிசியாக இருந்து விட்டேன். எனவேதான் பேச முடியவில்லை. அடுத்த முறை பாருங்கள், லோக்சபாவை கலக்கப் போகிறேன் என்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications