டீசல் விலை குறைக்கப்படாது: மத்திய அரசு
டெல்லி: டீசல் விலையைக் குறைக்கும் எண்ணம் இப்போதைக்கு அரசிடம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் பாண்டே தெரிவித்துள்ளார்.
டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை பெட்ரோலியத்துறை வட்டாரமும் உறுதிப்படுத்தியது. நேற்று விலைக் குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று எதிர்பார்க்கப்பட்டது போல விலைக்குறைப்பு அறிவிக்கப்படவில்லை. மேலும் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்படவே இல்லை என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியத்துறை செயலாளர் பாண்டே கூறுகையில், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கும் திட்டமும், யோசனையும் தற்போது துறையிடம் இல்லை என்றார்.
எனவே இப்போதைக்கு டீசல் விலைக் குறைப்புக்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகி விட்டது.
டீசல் விலைக் குறைப்பு குறித்து விவாதிக்கப்படாதது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், துரதிர்ஷ்டவசமாக இதுகுறித்து அமைச்சரவைக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம் பெறவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications