சென்னை-மதுரை இடையே வாரம் 2 சிறப்பு ரயில்
சென்னை: கோடைகாலத்தையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை- மதுரை இடையே வாரம் இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, மதுரையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை வாரம் வாரத்தில் இரு முறை (வியாழன், சனிக்கிழமைகளில்) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் (எண்-0634) மதுரையிலிருந்து இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து மார்ச் 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை வாரம் இருமுறை (வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில்) மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இந்த ரயில் (எண்-0633) சென்ட்ரலில் இருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு மதுரை சென்றடையும்.
முன்பதிவு ஆரம்பம்...:
இந்த ரயில்கள் கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மதுரையில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரயில் கூடுதலாக பெரம்பூரில் நின்று செல்லும்.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications