இலங்கையின் முப்படைத் தாக்குதல் - 143 தமிழர்கள் படுகொலை
Subscribe to Oneindia Tamil
வன்னி: வன்னியில் நேற்றும், நேற்று முன்தினமும் இலங்கையின் முப்படைகளும் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 143 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை இலங்கை தரை, கடல், வான் படையினர் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 98 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 265 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் மீது நேற்று முன்தினம் முப்படையினரும் தாக்குதல் நடத்தினர்.
இதில் 45 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications