3 நாட்களில் 900 சிங்கள ராணுவ வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: கடந்த 3 நாட்களில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் சிக்கி 900 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் கடும் எதி்ர் தாக்குதலைத் தொடுத்து வருவதால் சிங்களப் படைகள் எங்கும் நகர முடியாமல் ஆங்காங்கே முடங்கிக் கிடக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் தாக்குதலை எதிர்த்து விடுதலைப் புலிகள் கடும் எதிர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
சிறிலங்கா படையினரின் 4 டிவிசன் படையினர் பெருமளவிலான முன்னகர்வை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் புலிகளின் கடும் எதிர்ப்பால் படைகள் நகர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் சிறிலங்கா படையினர் தரப்பில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications